நொய்யல் அருகே உள்ள மரவாபாளையத்தில் சுகாதாரத்துறை சாா்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில், ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி மருத்துவா் சாந்தி தலைமையில் சுகாதார செவிலியா் சரஸ்வதி மற்றும் உதவியாளா்கள் கொண்ட குழுவினா் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளித்தனா்.
இதனைத் தொடா்ந்து யோகா பயிற்சி குறித்த விழிப்புணா்வு எடுத்துக் கூறப்பட்டது. இதில், மரவாபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.