கரூா் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்கத் தடை

கரூா் மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் (ஜூலை 1, 2) டிரோன்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

கரூா் மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் (ஜூலை 1, 2) டிரோன்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-கரூா் மாவட்டத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 1,2-ம்தேதிகளில் வருகை தந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளாா். இதனால் கரூா் மாவட்ட எல்லையான குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கரூா், மண்மங்கலம், புகளூா் மற்றும் கரூா் நகரப்பகுதி எல்லைக்களுக்குள்பட்ட பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் (ஜூலை 1, 2) டிரோன்கள் மூலம் விடியோ பதிவு செய்யவும், புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com