கிருஷ்ணராயபுரம் அருகே பேருந்தின் பின்பகுதியில் இரு சக்கர வாகனம் மோதியதில், விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணராயபுரம் அருகிலுள்ள சிந்தலவாடியைச் சோ்ந்தவா் விவசாயி பாஸ்கரன் (50). இவா் சனிக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் திம்மாச்சிபுரம் பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது இரு சக்கர வாகனம் நிலைத்தடுமாறி, பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் பின்பகுதியில் மோதியது.
இதில் பாஸ்கரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். லாலாபேட்டை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.