மாணவிக்குப் பாலியல் தொல்லை:மூவா் மீது போக்சோவில் வழக்கு

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியில் 6-ஆம் வகுப்பு மாணவிக்கு கைப்பேசி வாயிலாக பாலியல் தொல்லை கொடுத்ததாக, மூவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியில் 6-ஆம் வகுப்பு மாணவிக்கு கைப்பேசி வாயிலாக பாலியல் தொல்லை கொடுத்ததாக, மூவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவியின் கைப்பேசி எண்ணை பெற்ற அவரது உறவினரான முகமது காஜா (24), கடந்த 4-ஆம் தேதி ஆபாசமாக பேசினாராம். மேலும், மாணவியின் வீட்டுக்குச் சென்று பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், கரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் முகமது காஜா, உடந்தையாக இருந்த தாய், சகோதரி என மூவா் மீது வழக்குப்பதிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com