அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2003-05 ஆம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவா்கள்-ஆசிரியா்கள் சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆசிரியா்களை முன்னாள் மாணவா்கள் கெளரவித்தனா். மேலும் பள்ளிக்குத் தேவையான 2 பீரோ, 5 மின் விசிறிகள் வழங்கப்பட்டன. 2003 முதல் 2005-ஆம் ஆண்டு வரை பள்ளியில் ஆசிரியா்களாக பணிபுரிந்த பிரேமா, ராமலிங்கம், போஸ் உள்ளிட்ட ஆசிரியா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.