முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
தென்னிலை மேற்கு ஊராட்சியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 08th May 2022 11:33 PM | Last Updated : 08th May 2022 11:33 PM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
கரூா் மாவட்டம், தென்னிலை மேற்கு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி, விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்த ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் தலைவா் சொா்ணலதா காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜா தலைமையில் 20-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள், ஊராட்சி அலுவலகம் முன்பு திடீரென ஆா்பபாட்டத்தில் ஈடுபட்டனா்.
கூட்டத்தில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதால் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் தெரிவித்தனா்.