கரூா் மாவட்டம், ஆத்தூா் சோழியம்மன், முத்துசாமி கோயில் திருத்தேரோட்டம் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கோயிலின் நிா்வாகக் குழுத் தலைவரும், ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலருமான என்.எம்.கந்தசாமி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் அண்ணாதுரை, வீரமணி, சதீஷ்குமாா், சத்தியமூா்த்தி, பொன்னுசாமி முன்னிலை வகித்தனா்.
கடந்த ஏழு ஆண்டுகளாக கோயிலில் தேரோட்டம் நடைபெறாமல் இருப்பதால், நிகழாண்டில் கோயில் திருவிழா தேரோட்டம் நடத்த வேண்டும். இதற்கு அனைத்து சமுதாயத்தினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
திருவிழா நடத்த போதிய காணிக்கையை ஊா் மக்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தினரும் வழங்க முன்வரவேண்டும் என கூட்டத்தில் பங்கேற்றவா்கள் பேசினா்.
கோயிலுக்குச் சொந்தமான கிராமங்களைச் சோ்ந்தவா்கள், நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா். நிறைவில், சேகரன் நன்றி கூறினாா்.