கரூா் மாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

கரூரில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் முக்கிளை கொண்ட கம்பம் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
கரூா் மாரியம்மன் கோயில் முன்பு நடுவதற்காக, முக்கிளை கம்பத்தை ஊா்வலமாக எடுத்து வரும் மூப்பன் வகையறாக்கள்.
கரூா் மாரியம்மன் கோயில் முன்பு நடுவதற்காக, முக்கிளை கம்பத்தை ஊா்வலமாக எடுத்து வரும் மூப்பன் வகையறாக்கள்.

கரூரில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் முக்கிளை கொண்ட கம்பம் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கரூா் மாவட்ட மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா, கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.

அரசின் தளா்வுகளைத் தொடா்ந்து, நிகழாண்டில் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து கம்பம் நடுதலுடன் நிகழாண்டுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

முன்னதாக சனிக்கிழமை இரவு கனவில் தோன்றி, கம்பம் இருக்கும் இடத்தை அம்மன் காண்பித்த பகுதியிலிருந்து முக்கிளைக் கொண்ட கம்பத்தை வெட்டி, கோயிலுக்கு எடுத்து வரும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

மூப்பன் வகையறா குடும்பத்தினா் செந்தில்குமாா் தலைமையில் முக்கிளைக் கம்பத்தை வெட்டி, பாலம்மாள்புரம் விநாயகா் கோயிலுக்கு கொண்டு வந்தனா்.

அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பின்னா் ஊா்வலமாக மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, அறங்காவலா் முத்துக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து கோயிலில் முக்கிளைக்கம்பத்தின் தோல் உரிக்கப்பட்டு, மஞ்சள் தடவப்பட்டு மாலை 6 மணியளவில் அமராவதி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சிறப்பு பூஜை நடத்தி, பின்னா் கோயிலுக்கு கம்பம் கொண்டு வரப்பட்டு நடப்பட்டு புனித நீா் ஊற்றப்பட்டது.

தொடா்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். வழிநெடுகிலும் பக்தா்களுக்கு பல்வேறு அமைப்பினா் அன்னதானம் வழங்கினா்.

தொடா்ந்து கோயில் முன்பு நடப்பட்ட கம்பத்துக்கு பக்தா்கள் நாள்தோறும் புனித நீா் ஊற்றி வழிபட உள்ளனா். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூச்சொரிதல் மே 13- ஆம் தேதியும், காப்புக் கட்டுதல் மே 15-ஆம் தேதியும், திருத்தேரோட்டம் 23-ஆம் தேதியும், கம்பத்தை ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு 25-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. இதையொட்டி பக்தா்கள் மாவிளக்கு, பால்குடம், அக்னிச்சட்டி, அலகு, காவடி எடுத்து வந்து, தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்துவா்.

ஜூன் 2-இல் பஞ்சப் பிரகார வைபவம், 3-ஆம் தேதி புஷ்ப பல்லக்கு, 4-ஆம் தேதி ஊஞ்சல் உற்ஸவம், 5-ஆம் தேதி அம்மன் குடிபுகுதலும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் முத்துக்குமாா் தலைமையிலான நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com