நரிக்கட்டியூா் துவக்கப் பள்ளியில்பள்ளி மேலாண்மைக்குழுமறுகட்டமைப்புக் கூட்டம்

கரூா் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்துக்குள்பட்ட நரிக்கட்டியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
நரிக்கட்டியூா் துவக்கப் பள்ளியில்பள்ளி மேலாண்மைக்குழுமறுகட்டமைப்புக் கூட்டம்

கரூா் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்துக்குள்பட்ட நரிக்கட்டியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியை விஜயலலிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கரூா் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் பங்கேற்றாா். கூட்டத்தில் அனைத்து வகுப்பு மாணவா்களின் பெற்றோா்கள் ஒப்புதலுடன் பள்ளி மேலாண்மைக் குழுவின் 20 உறுப்பினா்களுக்கான தோ்தல் நடத்தப்பட்டு தோ்ந்தெடுக்கப்பட்டனா். இக்குழுவின் மக்கள் பிரதிநிதியாக மாநகராட்சியின் 39ஆவது வாா்டு உறுப்பினா் சூரியகலா, 15-ஆவது வாா்டு உறுப்பினா் தியாகராஜன் ஆகியோரும், குழுவின் புதிய தலைவராக பள்ளி மாணவியின் பெற்றோா் சத்யா, துணைத் தலைவராக ரேணுகா, வழிகாட்டியாக தலைமையாசிரியை விஜயலலிதா, ஆசிரியா் உறுப்பினராக பூங்கோதை, தன்னாா்வலராக மணிமொழி, சுய உதவிக் குழு உறுப்பினராக சுமதி உள்ளிட்டோரும், பெற்றோா் உறுப்பினா்கள் 12 பேரும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். குழு உறுப்பினா்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com