அரவக்குறிச்சியில் வாகனப் போக்குவரத்து எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை விரிவாக்கம், மேம்பாலம், தரைப்பாலம் உள்ளிட்டவை அமைக்க கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
அரவக்குறிச்சியில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வாகனப் போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி ஏ.வி.எம். காா்னா் மற்றும் புங்கம்பாடி பிரிவு ஆகிய இரண்டு இடங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், கன ரக வாகனங்கள் மற்றும் மாட்டு வண்டிகள் எத்தனை என்று கணக்கெடுக்கப்பட்டது. இக்கணக்கெடுக்கும் பணி
வாகனப் போக்குவரத்து எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை விரிவாக்கம், மேம்பாலம், தரைப்பாலம் உள்ளிட்டவை அமைக்க கணக்கு எடுக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.