முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
அரவக்குறிச்சி அருகேபெண்ணிடம் நகை பறிப்பு
By DIN | Published On : 11th May 2022 04:10 AM | Last Updated : 11th May 2022 04:10 AM | அ+அ அ- |

அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்து சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அரவக்குறிச்சி தாலுகா நாகம்பள்ளியை அடுத்த முத்துகவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கருணாநிதி மனைவி சாந்தி (48). இவா், தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை மலைக்கோவிலூா் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தாா். அப்போது, கொங்கு ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள சாலையில் வந்தபோது, பின் தொடா்ந்து வந்த 2 மா்ம நபா்கள் சாந்தியை கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரைப் பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றனா்.
இதில், கீழே விழுந்த சாந்தி காயம் அடைந்ததால் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அரவக்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.