கரூரில் வீட்டின்பூட்டை உடைத்துபணம் திருட்டு

கரூரில், மசாலா பொருள்கள் விற்பனையாளா் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா்: கரூரில், மசாலா பொருள்கள் விற்பனையாளா் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் தாந்தோணிமலை சிவசக்தி நகரைச் சோ்ந்தவா் சுரேஷ்(44). இவா், பிரபல மசாலா நிறுவனத்தின் முகவராக இருக்கிறாா். இவா் கடந்த 8-ஆம்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றாராம். பின்னா், செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த ரூ.60,000த்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com