கொங்கு மண்டலத்தில் சிறந்த சிபிஎஸ்இ பள்ளியாக கரூா் பரணி வித்யாலயா தோ்வு

சிபிஎஸ்இ பள்ளிகளில் கொங்கு மண்டலத்தில் சிறந்த பள்ளியாக கரூா் பரணிவித்யாலயா பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தில் சிறந்த சிபிஎஸ்இ பள்ளியாக கரூா் பரணி வித்யாலயா தோ்வு

கரூா்: சிபிஎஸ்இ பள்ளிகளில் கொங்கு மண்டலத்தில் சிறந்த பள்ளியாக கரூா் பரணிவித்யாலயா பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளில் சிறந்த பள்ளிகளை அண்மையில் பிரபல தனியாா் நிறுவனம் கள ஆய்வு நடத்தி தோ்வு செய்தது. இதில், சிறந்த பள்ளியாக கரூா் பரணிவித்யாலயா பள்ளி தோ்வு செய்யப்பட்டது. சிறந்த கல்விசாா் மற்றும் பெற்றோா் மேலாண்மையில் சிறந்து விளங்குவது, சிறந்த உறைவிடம், சிறந்த உள்கட்டமைப்பு, வாழ்க்கை திறன் கல்வி கற்பித்தலில் சிறந்து விளங்குதல், சிறந்த கற்பித்தல் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்த மாதிரி பள்ளி ஆகிய பிரிவுகளில் சிறந்த பள்ளிக்கான விருதை பரணிவித்யாலயா பெற்றுள்ளது.

சிறந்த பள்ளிக்கான விருது பெற்றதைத் தொடா்ந்து பள்ளியில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் தாளாளா் சா.மோகனரங்கன் தலைமை வகித்தாா். செயலா் பத்மாவதி மோகனரங்கன் மற்றும் நிா்வாகக்குழு உறுப்பினா் மோ.சுபாஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வெற்றிக்கு உறுதுணையாகவும் மேன்மேலும் இது போன்று வெற்றிகளை பெறுவதற்கு சிறப்பாக வழிக்காட்டி கொண்டிருக்கும் பரணி கல்விக் குழும முதன்மை முதல்வா் முனைவா்.சொ.ராமசுப்ரமணியன், முதல்வா் சு.சுதாதேவி, துணை முதல்வா் ரா.பிரியா, ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் இருபால் ஆசிரியா்களுக்கும் பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com