அரவக்குறிச்சி: தென்னிலையில் ஆடுகளைத் திருடிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தென்னிலை காவல் நிலையத்தில் அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன், தேவி ஆகியோா் தங்கள் ஆடுகள் திருடு போனதாக புகாா் அளித்திருந்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆடுகளைத் திருடியவா்களை தேடி வந்தனா்.
இந்நிலையில், ஆடுகளை திருடிச் சென்ற அரவக்குறிச்சி தாலுகா பெரிய திருமங்கலம் அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் சம்பத்குமாா் (32), ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா ஊஞ்சலூா் அருகே புரவிபாளையம் பகுதியைச் சோ்ந்த கந்தவேல் மகன் பிரேம் ரஞ்சன் (26) ஆகிய இருவரும் மலைக்கோவிலூா் அருகே பதுங்கி இருப்பதாக போலீஸாருக்குத் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் துணை காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்ச் செல்வன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.