முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கரூா் ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரா்களுக்கு ரூ.1.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் த. பிரபுசங்கா் வியாழக்கிழமை வழங்கினாா்.

கரூா் ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரா்களுக்கு ரூ.1.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் த. பிரபுசங்கா் வியாழக்கிழமை வழங்கினாா்.

கரூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

கூட்டத்தில் பெறப்பட்ட 32 மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்தாண்டை காட்டிலும் நிகாண்டில் கொடிநாள் நிதி அதிகளவில் வசூலிக்கப்படும் என்று ஆட்சியா் குறிப்பிட்டாா்.

கூட்டத்தில் 9 முன்னாள் படைவீரா்களுக்கு ரூ.1.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் ம.லியாகத், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் சைபுதீன், திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் ஞானசேகா் உள்ளிட்ட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com