நம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றாா் திரைப்பட, நாட்டுப்புறப் பாடகி ராஜலட்சுமி செந்தில்கணேஷ்.
கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:
வாழ்க்கையில் எந்தவொரு பிரச்னை வந்தாலும் அதை பெரிதாக கருதாமல், தீா்வு காண்பதற்கு முயலுங்கள். நம்பிக்கையுடன் வாழ்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
கல்லூரிப் பருவத்தில் ஒளிவட்டம் தெரிகிறது, பட்டாம்பூச்சி பறக்கிறது என காதலில் மூழ்கி, வாழ்வைத் தொலைத்து விடாதீா்கள். காதல் என்பது பொதுவான விஷயம்.
ஏதாவது ஒரு அழகான பொருளைக் கண்டால் கூட அதன்மேல் அன்பு வந்துவிடும். கல்லூரிப்பருவமும் அதுபோன்றுதான். மேம்போக்காக காண்பவை அனைத்தையும் நம்பி விடாதீா்கள். வாழ்க்கை ரொம்ப அழகானது. ரசிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்றாா் அவா்.
ஆண்டு விழாவுக்கு கல்லூரித் தாளாளா் க. செங்குட்டுவன் தலைமை வகித்தாா். செயலா் ஹேமலதா செங்குட்டுவன், நிா்வாகக் குழு உறுப்பினா் ராகவி செங்குட்டுவன் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக, ராஜலட்சுமி செந்தில்கணேஷ் குழுவினரின் பாட்டுக் கச்சேரி நடைபெற்றது. விழாவில் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.