அரவக்குறிச்சி வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட குறைகேட்பு நாள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியா் பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுமக்கள் ஏராளமனோா் பங்கேற்று, தங்களது குறைகளை மனுக்களாகத் தெரிவித்தனா்.
குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல், புதிய குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் மாற்றம் ஆகியவை தொடா்பாக மனுக்கள் அளிக்கப்பட்டன.
குளித்தலையில் : குளித்தலை வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்ட வழங்கல் அலுவலா் மதியழகன் தலைமை வகித்தாா். 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து, தீா்வு பெற்றனா்.