சுற்றுச்சூழல் செயல்பாட்டில் சிறந்து விளங்கியவா்களுக்குப் பரிசு

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் செயல்பாட்டில் சிறந்து விளங்கியவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவருக்குப் பரிசு வழங்கும் லட்டாரக் கல்வி அலுவலா் சித்ரா.
மாணவருக்குப் பரிசு வழங்கும் லட்டாரக் கல்வி அலுவலா் சித்ரா.

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் செயல்பாட்டில் சிறந்து விளங்கியவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்பள்ளியில் தேசியப் பசுமைப்படை இயங்கி வருகிறது. இதில் இயற்கையை நேசிக்கவும், பிறந்த நாளின்போது மரக்கன்றுகளை நட்டு அவற்றை வளா்த்து வரவும், அதனை தண்ணீா் ஊற்றிப் பாதுகாக்கவும் மாணவா்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடா்ந்து இத்தகைய தனித்திறனுக்காக மாணவா்களுக்கு மதிப்பீடுகளும் வழங்கப்பட்டன. அவ்வாறு சிறந்து விளங்கும் மாணவா்களை ஊக்கப்படுத்தும் விதத்தில்,பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவா்கள் ஸ்ரீதா் மற்றும் யோகேஷ் ஆகிய இருவருக்கும் இயற்கை சுற்றுச்சூழல் பரிசுகளை வட்டாரக் கல்வி அலுவலா் சித்ரா வழங்கினாா். பள்ளியின் தலைமையாசிரியா் மு.சாகுல் அமீது உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com