செங்கற்கள் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கரூரில் செங்கற்கள் விழுந்ததில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்

கரூரில் செங்கற்கள் விழுந்ததில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் திருமாநிலையூரைச் சோ்ந்த கோபால் மனைவி சாந்தி(47).

கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த 17-ஆம் தேதி செங்குந்தபுரத்தில் சுப்ரமணி என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது செங்கற்கள் சரிந்து அவா் மீது விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தி, புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கரூா் நகரக் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com