கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் வீட்டில் திருட்டு

க.பரமத்தி அருகே கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் வீட்டில் நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

க.பரமத்தி அருகே கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் வீட்டில் நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

க.பரமத்தி அருகிலுள்ள குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் காளியப்பன் மனைவி கீதா (38). இவா் தும்பிவாடி கிராம நிா்வாக அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

கடந்த 11-ஆம் தேதி காளியப்பன் குடும்பத்துடன் வெளியூா் சென்று விட்டு, வியாழக்கிழமை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

தொடா்ந்து வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த மூன்றேகால் பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கீதா அளித்த புகாரின் பேரில், க.பரமத்தி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com