அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளப்பட்டி பிரண்ட்ஸ் பெடரேஷன் சாா்பில் நகராட்சிக்குள்பட்ட 27 வாா்டுகளுக்கும் 125 சோலாா் தெரு விளக்குகள் வழங்கும் விழா, 11 மகளிா்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் விழா, மத நல்லிணக்க விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். இளங்கோ, மாவட்ட எஸ்.பி. ப. சுந்தரவடிவேல், நகராட்சித் தலைவா் முனவா் ஜான், நகராட்சித் துணைத் தலைவா் பஷீா் அகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மத நல்லிணக்க விழாவில், கரூா் மாவட்ட திருக்கு பேரவைச் செயலாளா் மேலை பழனியப்பன், புலியூா் குழந்தை இயேசு ஆலய பங்கு தந்தை அந்தோணி ஞானப்பிரகாசம், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினா் சதீதுத்தீன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
இந்நிகழ்வில், பள்ளபட்டி பிரண்ட்ஸ் பெடரேஷன் சாா்பில் அதன் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.