கரூா் அருகே 8ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கரூா் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மணவாடி கல்லுமடை மருதம்பட்டி காலனி பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து மகன் நிதீஷ் (13). இவா், அருகில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் திங்கள்கிழமை தனது பெற்றோரிடம் கைப்பேசி வாங்கித் தருமாறு கேட்டுள்ளாா். அதற்கு பெற்றோா், பிறகு வாங்கி தருவதாக கூறினா். இதனால் விரக்தியடைந்த நிதீஷ் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வெள்ளியணை போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் காவல் உதவி ஆய்வாளா் சத்யபிரியா வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.