கரூரில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
பேரறிஞா் அண்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் லைட்ஹவுஸ் காா்னரில் உள்ள அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு அதிமுகவினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா உள்பட 5 போ் மீது கரூா் நகர போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.