தமிழக அரசு நடத்திய வானவில் மன்றம் அறிவியல் போட்டில் சிறப்பிடம் பெற்று வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்லவுள்ள அரவக்குறிச்சி அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி அருகே உள்ள செண்பகனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஷோபனா, தமிழக அரசு நடத்திய வானவில் மன்றம் அறிவியல் போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவில் வெற்றி பெற்றாா்.
இதன்மூலம்அரசு சாா்பில் வெளிநாடு செல்ல தகுதி பெற்றுள்ளாா்.
இதனைத் தொடா்ந்து மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், மாணவிக்கு பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியா் கருணாநிதி, மாணவி ஷோபனாவுக்கு ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் பாராட்டு தெரிவித்தனா்.