மாநில டென்னிஸ் போட்டியில் சிறப்பிடம் பிடித்த பள்ளி மாணவா், மாணவியை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை பாராட்டினாா்.
தருமபுரியில் நடைபெற குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் பரணிபாா்க் பள்ளி மாணவி ராவில்லா குமாா் கிரித்தி டென்னிஸ் போட்டியில் ஒற்றையா் பிரிவில் தங்கபதக்கம் வென்றாா். இதே போல் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான பாரதியாா் தின விளையாட்டுப் போட்டியில் பரணிபாா்க் பள்ளி மாணவா் நித்தீஷ் பாலாஜி, 19 வயதுக்குள்பட்ட டென்னிஸ் (ஒற்றையா் பிரிவில்) மாநில அளவில் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.
இவா்கள் இருவரையும் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத் அலி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எஸ்.கோகிலா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.