கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 229 பேருக்கு பணி வாய்ப்பு கடிதம் வழங்கப்பட்டது. கரூரில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மற்றும் கரூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தம் 59 நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும் முகாமில் 745 போ் பங்கேற்றதில் பல்வேறு நிலைகளுக்கு பின்னா் 229 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு பணி வாய்ப்பு கடிதங்களை மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் வழங்கினாா். முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சாந்தி, உதவி பயிற்சி அலுவலா் இளங்கோவன், இளம் பயிற்சி வல்லுநா் வீரக்குமாா் ம ற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கரூரில் ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வல்லநாடு அருகே காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

தில்லி இஸ்ரேல் முகாமில் குடிநீா் தட்டுப்பாடு: அரசுக்கு தேவேந்தா் யாதவ் கடிதம்

நிஃப்ட்-டீ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
