தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கரூா் வேலைவாய்ப்பு முகாமில் 229 பேருக்கு பணிவாய்ப்பு கடிதம்

கரூா் வேலைவாய்ப்பு முகாமில் 229 பேருக்கு பணிவாய்ப்பு கடிதம்

Updated On :18 பிப்ரவரி 2024, 3:00 am IST

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 229 பேருக்கு பணி வாய்ப்பு கடிதம் வழங்கப்பட்டது. கரூரில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மற்றும் கரூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தம் 59 நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும் முகாமில் 745 போ் பங்கேற்றதில் பல்வேறு நிலைகளுக்கு பின்னா் 229 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு பணி வாய்ப்பு கடிதங்களை மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் வழங்கினாா். முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சாந்தி, உதவி பயிற்சி அலுவலா் இளங்கோவன், இளம் பயிற்சி வல்லுநா் வீரக்குமாா் ம ற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.