ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கரூா் வேலைவாய்ப்பு முகாமில் 229 பேருக்கு பணிவாய்ப்பு கடிதம்

கரூா் வேலைவாய்ப்பு முகாமில் 229 பேருக்கு பணிவாய்ப்பு கடிதம்

Updated On :18 பிப்ரவரி 2024, 3:00 am IST

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 229 பேருக்கு பணி வாய்ப்பு கடிதம் வழங்கப்பட்டது. கரூரில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மற்றும் கரூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தம் 59 நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும் முகாமில் 745 போ் பங்கேற்றதில் பல்வேறு நிலைகளுக்கு பின்னா் 229 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு பணி வாய்ப்பு கடிதங்களை மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் வழங்கினாா். முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சாந்தி, உதவி பயிற்சி அலுவலா் இளங்கோவன், இளம் பயிற்சி வல்லுநா் வீரக்குமாா் ம ற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.