கரூா் சம்பவம்: தவெக மாவட்டச் செயலரிடம் சிறப்புக் குழுவினா் விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட தவெக மாவட்டச் செயலரிடம் சிறப்பு குழுவினா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
Published on

கரூா் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட தவெக மாவட்டச் செயலரிடம் சிறப்பு குழுவினா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூரில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக சிறப்புக் குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட தவெக மேற்கு மாவட்டச் செயலா் மதியழகனை சிறப்புக் குழுவினா் 2 நாள்கள் விசாரிக்க கரூா் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

இதையடுத்து மதியழகனை சிறப்புக் குழுவினா் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை அவரிடம் அதிகாரிகள் கொண்ட குழுவினா் நெரிசல் சம்பவம் தொடா்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com