கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் ஜூன் 20-இல் மாணவர் சேர்க்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நுழைவு நிலை வகுப்புக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டில்
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டத்தில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நுழைவு நிலை வகுப்புக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிலுவையாக உள்ள காலியிடங்களுக்கு ஜூன் 20 ஆம் தேதி சேர்க்கை நடைபெற உள்ளது.  
இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் க. முருகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை, இணையம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேர்க்கைக்கான குழந்தைகளை தேர்வு செய்யும் பணி மே 31-இல் அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்றது. நிலுவையாக உள்ள காலியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஜூன் 20 ஆம் தேதி சேர்க்கை வழங்கப்பட உள்ளது.  எனவே, ஏற்கெனவே விண்ணப்பித்து சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படாத குழந்தைகளின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று காலியாக உள்ள இடத்தில் சேர்க்கை பெற்று பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com