சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்

பெரம்பலூர் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர்  மதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை (மே 18) நடைபெறுகிறது.
Updated on
1 min read

பெரம்பலூர் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர்  மதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை (மே 18) நடைபெறுகிறது.
விழாவையொட்டி, கடந்த 2ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, 9ஆம் தேதி இரவு 12 மணியளவில் பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கும், அதிகாலை 4 மணியளவில் மதுரகாளியம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.தொடர்ந்து, நாள்தோறும் இரவு அன்னம், சிம்மம், யானை, ரிஷபம், குதிரை உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பரிவார தெய்வங்களுடன் அம்மன் வீதியுலா புதன்கிழமை இரவு வரை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. சிறுவாச்சூரில் உள்ள பிரதான வீதிகள் வழியே இழுத்துச்செல்லப்படும் தேர் மாலையில் நிலைக்கு வந்தடையும்.
ஏற்பாடுகளை, திருச்சி உதவி ஆணையரும், தக்காருமான ஐ. முல்லை, செயல் அலுவலர் பி. ஜெயதேவி மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com