மே 20ஆம் தேதி பெரம்பலூரில் மின்தடை

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பெரம்பலூர் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மே 20ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது.
Updated on
1 min read

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பெரம்பலூர் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மே 20ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அமல்ராஜ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  பெரம்பலூர் தானியங்கி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூர் நகர்ப் பகுதிகளான புறநகர் மற்றும் பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகர், நான்குசாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, ஆலம்பாடி சாலை, அண்ணா நகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், கிராமிய பகுதிகளான பீல்வாடி, அசூர், சிறுகுடல், சித்தளி, அருமடல், செங்குணம், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிகாடு, இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மே 20ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com