இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் ஏப். 20 ஆம் தேதி முதல் ஏ.சி மற்றும் குளிர் சாதனப்பெட்டி பழுதுநீக்குவது தொடர்பான பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
தகுதிகள்: 18 முதல் 45 வயதுக்கு குறைவாகவும், குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு படித்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுயத்தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் பயிற்சி காலத்தில், காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஏப். 18 ஆம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு, ஐ.ஓ.பி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீப் காம்ப்ளக்ஸ், முதல்மாடி, மதனகோபாலபுரம், பெரம்பலூர் - 621212 எனும் முகவரியிலோ 04328 277896 எனும் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அதன் இயக்குநர் ஜே. அகல்யா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.