பெரம்பலூர் அருகேயுள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி செல்வி (32). இவர், திங்கள்கிழமை காலை பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, செல்வி வைத்திருந்த பணப் பையை பறித்துக்கொண்டு பெண் ஒருவர் ஓடினார்.
இதையறிந்த அங்கிருந்த பயணிகள் சிலர், தப்பியோடிய பெண்ணை பிடித்து பெரம்பலூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் சேலம் மாவட்டம், அயோத்திபட்டினம் ராமர்கோயில் தெருவைச் சேர்ந்த முனியாண்டி மனைவி ராணி (34) என்பது தெரியவந்தது. புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து ராணியை கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.