பெரம்பலூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 15) மின்சாரம் இருக்காது.
பராமரிப்புப் பணியால் அங்கிருந்து மின்சாரம் பெறும் பெரம்பலூர் நகர்ப் பகுதிகளான பழைய, புறநகர் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்கு சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, ஆலம்பாடி சாலை, அண்ணா நகர், கே.கே. நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், பாலம்பாடி மற்றும் கிராமிய பகுதிகளான பீல்வாடி, அசூர், சிறுகுடல், சித்தளி, அருமடல், செங்குணம், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிகாடு, இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, எளம்பலூர் மற்றும் சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவித்தார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கி. மாணிக்கம்.