அம்மா உடற்பயிற்சிக் கூடம், பூங்கா திறப்பு

பெரம்பலூர் ஒன்றியத்துக்குள்பட்ட எளம்பலூர் மின்நகரில் ரூ. 30 லட்சம் மதிப்பில்

பெரம்பலூர் ஒன்றியத்துக்குள்பட்ட எளம்பலூர் மின்நகரில் ரூ. 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சிக் கூடம், பூங்கா திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், பூங்கா திறப்பு விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி தலைமை வகித்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரா.தமிழச்செல்வன், ஆர்.டி.ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா திறந்து வைத்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தி. ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com