ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட கொளக்காநத்தம் ஊர்ப்புற நூலகத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப் போட்டிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த வாசகர் வட்டத் தலைவர் வெங்கடாசலம், அண்ணாதுரை உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நூலக வாசகர்களுக்கு அண்ணாவின் படைப்புகள் தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வாசகர் வட்ட நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், பாஸ்கர், முத்துசாமி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
வாசகர் வட்ட முன்னாள் தலைவர் தங்கம், நிர்வாகிகள் காமராஜ், ராஜேந்திரன், பாரதிதாசன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், ஊர்ப்புற நூலகர் ராஜா நன்றி கூறினார்.