சுமை ஆட்டோவில் பைக் மோதி முதியவர் சாவு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சுமை ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார். 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சுமை ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார். 
வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர்- பூலாம்பாடி சாலையைச் சேர்ந்த ம. அப்பாதுரை (65), விவசாயி. இவர், புதன்கிழமை காலை அரும்பாவூரில் இருந்து பூலாம்பாடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அவ்வழியே சென்ற சுமை ஆட்டோவில் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்தார்.  புகாரின்பேரில், அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com