அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
By DIN | Published On : 14th April 2019 03:38 AM | Last Updated : 14th April 2019 03:38 AM | அ+அ அ- |

அன்னவாசல் அருகே இறந்து நிலையில் கிடந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
அன்னவாசல் ஒன்றியம், பரம்பூர் சேந்தாங்கரை குளக்கரையில் அரசுக்குச் சொந்தமான கட்டடத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் அன்னவாசல் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று சடலத்தை கைப்பற்றினர்.
இறந்தவர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து அன்னவாசல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.