பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பால சக்தி புரஷ்கார்

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பால சக்தி புரஷ்கார் எனும் குழந்தைகளுக்கான தேசிய விருதுபெற விண்ணப்பிக்கலாம். மேலும், குழந்தைகள் நலனுக்கு பாடுபட்ட தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார்.  
         புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் வீர, தீர செயல்புரிந்த தனித்தகுதி படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக, பால சக்தி புரஷ்கார் எனும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. 
இவ்விருது ரூ. 1 லட்சத்துக்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவற்றைக் கொண்டதாகும். குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலம் ஆகிய துறைகளில் குழந்தைகளுக்கான சேவைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக பால கல்யாண் புரஷ்கார் எனும் தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ. 1 லட்சத்துக்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதுக்கு ரூ. 5 லட்சத்துக்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.
இவ்விருதுகளுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள்  w‌w‌w.‌n​c​a-‌w​c‌d.‌n‌i​c.‌i‌n    எனும் இணையதளத்தில் உள்ளது. மேலும் விருதுக்கு, இணையதளம் வழியாக மட்டுமே ஆக. 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு புதுதில்லியில் குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com