பேரளி பகுதிகளில் ஆகஸ்ட் 6 மின் தடை

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பேரளி, கல்பாடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 6) மின் விநியோகம் இருக்காது.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பேரளி, கல்பாடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 6) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூர் மின் கோட்டத்துக்குள்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, அசூர், சித்தளி, பீல்பாடி, குரும்பாபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பேரளி துணை மின் நிலைய உதவிச் செயற்பொறியாளர் கி. மாணிக்கம் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com