பெரம்பலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பரவலான மழை பெய்தது.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது. இரவு 7.20 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் பரவலான மழை பெய்தது. தொடர்ந்து, ஆங்காங்கே பலத்த மழையும், ஒருசில இடங்களில் பரவலான மழையும் பெய்தது.
நகரில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், சாலையோரங்களிலும், வடிகால் வாய்க்கால்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் கவுல்பாளையம், சித்தளி, பேரளி, ஒதியம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குளிர் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.