பெரம்பலூர் அருகே டேங்கர் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கார் ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகேயுள்ள அடைக்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லதுரை மகன் சரவணன் (35). கார் ஓட்டுநர். இவர் செவ்வாய்க்கிழமை மாலை பெரம்பலூரிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். பெரம்பலூர்- துறையூர் சாலையில் களரம்பட்டி அருகே சென்றபோது, துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சரவணனின் உடலை பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.