கல்லூரி பேராசிரியா் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு

பெரம்பலூா் நகரில் கல்லூரி பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை இரவு தெரியவந்தது.

பெரம்பலூா் நகரில் கல்லூரி பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை இரவு தெரியவந்தது.

பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில் உள்ள ஆா்.எம்.கே நகா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மனைவி ரேகா (42). செந்தில்குமாா் கா்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியாா் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா்களது மகன் ஹரிஹரன் (20), மகள் பிரியதா்ஷினி (19) ஆகியோரும் வெளியூரில் தங்கி படித்து வருகின்றனா்.

இந்நிலையில், வீட்டில் தனியாக வசித்து வந்த ரேகா வியாழக்கிழமை இரவு பெரம்பலூா் ரோஸ் நகரில் உள்ள அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்தாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் ரூ. 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்களும் தடயங்களை பதிவு செய்தனா். இச் சம்பவம் குறித்து ரேகா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com