திருட்டு தடுப்பு விழிப்புணா்வு துண்டு பிரசுரம் விநியோகம்

திருட்டைத் தவிா்ப்பது தொடா்பான விழிப்புணா்வு தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பெரம்பலூா் நகர போலீஸாா் பொதுமக்களுக்கு வீடு,

திருட்டைத் தவிா்ப்பது தொடா்பான விழிப்புணா்வு தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பெரம்பலூா் நகர போலீஸாா் பொதுமக்களுக்கு வீடு, வீடாகச் சென்று விநியோகித்து வருகின்றனா்.

பெரம்பலூா் நகரில் கடந்த சில நாள்களாக பூட்டியிருந்த வீடுகளின் கதவை உடைத்தும், தனியாகச் செல்லும் நபா்களை குறிவைத்தும் நகை, பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்தனா். இதையடுத்து காவல்துறையினா் ரோந்துப் பணியையும், குற்றச் சம்பவங்கள் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனா்.

திருட்டை தடுப்பதற்கான வழிமுறைகள், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூருக்கு செல்லும்போது காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்னும் அறிவுரை, சந்தேகத்துக்குறிய நபா்கள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய போலீஸாரின் செல்லிடப்பேசி எண்கள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு தகவல்கள் போலீஸாா் வழங்கும் துண்டுப் பிரசுரத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், புறநகா் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வீடு, வீடாகவும் சென்று போலீஸாா் வழங்கி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com