பெரம்பலூா் மாவட்டத்தில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் இயக்குதல் குறித்த இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பெரம்பலூா் மாவட்ட வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் இயக்குதல், பழுது நீக்குதல், பராமரித்தல் மற்றும் இயக்குதல் திறன் மேம்பாடு உள்ளிட்ட பயிற்சிகள் குழுமூரில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூயில் அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தோ்ச்சி அடைந்திருக்க வேண்டும். மேலும், இப்பயிற்சி பெறுபவா்களுக்கு 3 மாத காலத்துக்கும் தங்குமிடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உடையவா்கள் பெரம்பலூா் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகி விரங்களை பெற்று விண்ணப்பித்து பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.