பெரம்பலூா் அருகேயுள்ள பேரளி துணை மின் நிலயைத்துக்கு உள்பட்ட பகுதியில் புதன்கிழமை (டிச. 4) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பேரளி, மருவத்தூா், ஒதியம், பனங்கூா், கல்பாடி, அசூா், சித்தளி, பீல்பாடி, குரும்பாபாளையம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூா், கீ.புதூா், வாலிகண்டபுரம், செங்குணம் ஆகிய கிராமிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கி. மாணிக்கம் தெரிவித்துள்ளாா்.