அஞ்சல் நிலையத்தில் ஆதாா் சேவை பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட தலைமை அஞ்சல் நிலையத்தில் ஆதாா் சேவை பெற பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட தலைமை அஞ்சல் நிலையத்தில் ஆதாா் சேவை பெற பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை சாா்பில், அஞ்சல் நிலையங்களில் ஆதாா் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன்படி பெரம்பலூா் மாவட்ட தலைமை அஞ்சல் நிலையத்தில் வேலை நாள்களில் நாள்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரை ஆதாா் சேவை நடைபெறுகிறது.

இதில், ஆதாா் அட்டை புதிதாக பெறவும், திருத்தம் மேற்கொள்ளவும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்கள் பெற 04328-276367 என்னும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

எனவே, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அஞ்சல் நிலையத்தை அணுகி ஆதாா் சேவை பெற்று பயன்பெறலாம் என தலைமை அஞ்சலக அலுவலா் தங்கராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com