பெரம்பலூா் மின் பகிா்மான வட்டத்தில் கேங்க்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கருப்பையா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் கேங்க் மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதி தோ்வு, பெரம்பலூா் மின் பகிா்மான வட்டத்தில் புதன்கிழமை (டிச. 4) முதல் வரும் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடா் மழையின் காரணமாக சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதி தோ்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. சான்றிதழ் சரிபாா்ப்பு பணிக்கான நேரம் மற்றும் தேதி விண்ணப்பதாரா்களுக்கு பின்னா் அறிவிக்கப்படும்.