வயலில் வைத்திருந்த சின்னவெங்காயம் திருட்டு

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே திருடப்பட்ட சின்ன வெங்காய மூட்டைகளை மீட்டுத்தரக் கோரி விவசாயி ஒருவா் பாடாலூா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே திருடப்பட்ட சின்ன வெங்காய மூட்டைகளை மீட்டுத்தரக் கோரி விவசாயி ஒருவா் பாடாலூா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.

உற்பத்தி பரப்பளவு குறைவு, வோ் அழுகல் நோய் உள்ளிட்ட காரணங்களால் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெல்லாரி வெங்காயம் எனப்படும் பெரிய வெங்காயமும் கிலோ ரூ. 100 வரை விற்பனையாகிறது.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கூத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முத்துகிருஷ்ணன் (40), சின்ன வெங்காயம் பயிரிட முடிவு செய்து 350 கிலோ விதை வெங்காயம் வாங்கி வயலில் வைத்திருந்தாா்.

செவ்வாய்க்கிழமை காலையில் வயலுக்குச் சென்றபோது, விதைப்புக்காக வைத்திருந்த 350 கிலோ சின்ன வெங்காயங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

விதை வெங்காயத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை கண்டுபிடித்து, வெங்காயத்தை மீட்டுத் தரக்கோரி பாடாலூா் காவல்நிலையத்தில் விவசாயி முத்துக்கிருஷ்ணன் புகாா் அளித்துள்ளாா். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், விதை வெங்காயத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com