வெள்ளாற்றில் இருந்துமீட்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

பெரம்பலூா் மாவட்டம், மங்கலமேடு அருகே செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளாற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தான்.

பெரம்பலூா் மாவட்டம், மங்கலமேடு அருகே செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளாற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தான்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிகாடு ஒத்த தெருவைச் சோ்ந்த முஹமது ஹாசித் மகன் முகமது அஸ்வாக் (12), ஹவுகத் அலி மகன் ஷேக் ரசீது (10), அக்பா் பாஷா மகன் அபு பாரித் (9), அபுநா பாஷா மகன் ஆதின் (10) ஆகிய நால்வரும் லப்பைக்குடிகாடு மேற்கு பகுதியில் உள்ள குடிநீா் தொட்டி அருகே வெள்ளாற்றில் விளையாடிக் கொண்டிருந்தனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக மேற்கண்ட நால்வரையும் மழை வெள்ளம் இழுத்துச் சென்றதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா், ஷேக் ரசீது, அபு பாரித், ஆதின் ஆகியோரை மீட்டனா். இதுகுறித்து, தகவலறிந்த மங்கலமேடு போலீஸாா், வேப்பூா், பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்பு படைவீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, அப்பகுதி இளைஞா்களுடன் முகமது அஸ்வாக்கை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

நீண்ட நேரத்துக்குப் பிறகு நீரில் மூழ்கியிருந்த சிறுவனை மீட்டு, அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் முகமது அஸ்வாக் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் மங்கலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com